ஞானி மேற்கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்று ஒ பக்கங்களில் எழுதி இருக்கிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று தெரிய வில்லை. ஏனென்றால், பொறியியல் சம்பத்தப்பட்ட எல்லா புத்தகங்களும் ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகின்றன. இதை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்தால், அந்த காரியம் முடிவதற்கு இன்னும் 10 வருடங்களாவது ஆகும். அதுவும் இல்லாமல், ஜப்பானில் இருக்கும் பொறியியல் எழுத்தாளர்களை போல தமிழில் யாரும் இல்லை - அங்கு நடக்கும் ஆராய்ச்சியை போல, பிரான்சில் நடக்கும் ஆராய்ச்சியை போல நம்ம ஊரில் இல்லை. தமிழில் பொறியியல் படித்தவர்களை வேலைக்கு வைத்து கொள்ள யார் இருக்கிறார்கள்?
இன்று மென்பொருள் துறையில் நாம் சீனாவை ஓரம்கட்டி முன்னிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் ஆங்கில அறிவு தான்.
அதனால் இந்த மாதிரி முயற்சியை விட்டு விட்டு, ஒவ்வொரு இந்தியனையும் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் கற்று கொள்ள ஊக்க படுத்த வேண்டும் - அது தான் இப்போது நாட்டுக்கு தேவை. இன்று ஹிந்தி தெரியாத தமிழனால் தமிழ் நாட்டிற்கு வெளியே செல்ல முடியவில்லை என்பதை ஞானி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழி கல்வி என்பது இரண்டடி பின்னே போகின்ற செயல் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment